கல்குவாரிக்கு அமைக்க எதிர்ப்பு! வனவிலங்குகள் பாதிக்கும் நிலத்தடி நீர் காய்ந்துவிடும்.. மக்கள் மறியல்!

ஜி.கே.சேகரன்,
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சுமார் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கல்லூர் பகுதியில் கல்குவாரி அமைக்கப்படுவதாக தெரிகிறது.
அப்பகுதியில் கல்குவாரி அமைக்கப்பட்டால், வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனவே அப்பகுதி கல்குவாரி அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அளித்துள்ளனர்.
ஆனால் கல்லியூர் பகுதியில் மீண்டும் கல்வாரி அமைக்கப் பணிகள் நடைபெற்றதால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் திடீரென திரண்டு பச்சூர் டு குப்பம் செல்லும் சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் தாசில்தார் இது குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் எனக் கூறினர் ஆனால் தாசில்தார் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்துக்கு வராத காரணத்தால் சாலை மறியல் தொடர்ந்தது.