குடிநீர் தரம் குறித்த பரிசோதனை! சாலையில் விளக்கம்!

கு.அசோக்,
வேலூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது,
வேலூர் மாவட்டத்தில் வரும் வடகிழக்கு பருவ மழையை கருத்தில் கொண்டு "மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்பு பேரணி",இன்று பள்ளி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டது.
வேலூர் கோட்டை அருகேயுள்ள காந்தி சிலை முதல் வெங்கடேஸ்வரா பள்ளி வரை நடத்தப்பட்ட இப்பேரணியை வேலூர் வருவாய் கோட்டசியர் கவிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் குடிநீர் தரம் குறித்த பரிசோதனை " கள பரிசோதனை பெட்டி மூலம் விளக்கி காட்டப்பட்டது "மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு" குறித்த விளக்க நோட்டீஸ்களும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நித்தியானந்தன், உதவி நிர்வாக பொறியாளர் குமரவேல், உதவி பொறியாளர் ஜெயப்ரியா, உதவிநில நீர் வல்லுநர் பரிதிமார்கலைஞன், ஆகியோர் கலந்து கொண்டனர்.