நீதிமன்ற பணிகளை புறக்கணித்து முழக்கமிட்ட வழக்கறிஞர்கள்!

ஜி.கே.சேகரன்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களை கைவிட வலியுறுத்தி குடியாத்தம் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்பாட்டமும் மனித சங்கிலி போராட்ட்டமும் நடைபெற்றது. அதில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொது மக்களையும் வழக்கறிஞர்களையும் பாதிக்கும் புதிய சட்டங்களை திரும்ப பெற கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தினால் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் பாதிப்படைவதாலும், ஐபிசி, சிஆர்பிசி பெயர்களை மாற்றக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ்,பிஎஸ்ஏ சட்டங்களை திரும்ப பெற முழங்கினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டங்களையும், சட்ட திருத்தங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி குடியாத்தத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், மாஜிஸ்திரேட் கோர்ட் ஆகிய நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணிக்கப்பட்டது.