ஒரே ஒரு போலிஸ்டேஷனுக்காக நீதிமன்றமா?வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

ஒரே ஒரு போலிஸ்டேஷனுக்காக நீதிமன்றமா?வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

  கு.அசோக்,

வாலாஜா  ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.

இராணிப்பேட்டை மாவட்டம்,  வாலாஜா  நகரத்தில் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்(1)(2) என செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெமிலி மற்றும் கலவை ஆகிய இரண்டு தாலுக்கா பகுதிகளில் புதிதாக நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளதால் வாலாஜா நீதிமன்றத்திற்கு வரக்கூடிய வழக்குகள் எண்ணிக்கை குறைவு ஏற்படும் எனவும்,

  மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதால் காவல் நிலையங்களின் எல்லைகள் வரையறைக்கப்பட்டு வழக்கு வாதங்கள் வாலாஜா நீதிமன்றத்தில் இருந்து புதிய நீதிமன்றங்களுக்கு மாற்றப்படும் என்பதாலும், வாலாஜா காவல் நிலையத்திற்கு மட்டுமே ஒரு நீதிமன்றம் தனித்து செயல்படும் விதமாக அமையும் என தெரிவித்து வாலாஜா வழக்கறிஞர்கள் சங்கத்தினர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து ஒதுங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மேலும், வாலாஜா நீதிமன்றத்தை பிரிக்கும் செயலை உடனே கைவிட வேண்டுமென தெரிவித்து தமிழக அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராக அனைத்து வழக்கறிஞர்களும் பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.