மனுக்கள் மீது ஸ்பாட்டில் தீர்வு!

கு.அசோக்,
பாணாவரத்தில் மக்களுடன் முதல்வர் முகாமானது நடைபெற்றது. இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பானாவரம் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் போளிப்பாக்கம், ஆயல், சூரை, பழையபாளையம் ,தப்பூர், நந்திமங்கலம், குன்னத்தூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.
அப்போது அடிப்படை வசதிகள், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள், சிறு தொழில் செய்வதற்கான கடன் உதவி, விவசாயத்திற்கான மானியங்கள் கருவி, இலவச பட்டா, மின் இணைப்பு பெயர் மாற்றம், மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீரவரத்து கால்வாய்கள் தூர்வாருதல் குறித்து மக்கள் கோரிக்கைகளை முன் வைத்து மனுக்கள் அளித்தனர்.
அவற்றை சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலையில் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.
மேலும் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு நல திட்ட உதவிகளை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என அரசு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அப்போது ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த முகாமில் சுமார் 600 மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.