ஊருக்கு ஒரு கவர்னர் என ஆகிவிடும் போல் உள்ளது! அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

ஊருக்கு ஒரு கவர்னர் என ஆகிவிடும் போல் உள்ளது! அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

ஜி.கே.சேகரன்,

இரண்டு மூன்று மாநிலங்களுக்கு ஒரு கவர்னர் இருந்தால் போதுமானது என்று அம்பேத்கர் சொன்னார், ஆனால் இங்க விட்டால் ஊருக்கு ஒரு கவர்னர் ஆகிவிடும் போல என்று அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக சொன்னார்.

 வேலூர் மாவட்டம்,  காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொன்னை ஆற்றில் அமைச்சர் துரைமுருகன்  ரூ.19.46 கோடி மதிப்பில் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மற்றும் மேல்பாடி கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

  வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மேல்பாடி பொன்னையாற்றில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் முதலாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவருடைய கருத்து எடப்பாடி பழனிசாமி கூறுவதும் அதிமுக குறித்து அவருடைய கருத்து, ஆளுநர் ஆன் லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பினார்.

   மீண்டும் நாங்கள் மசோதாவை அனுப்பினால் ஆளுநர் கட்டாயம் கையெழுத்திட வேண்டும் மீண்டும்.

  ஆகவே ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைப்போம் என்று கூறினார்.

   மேலும், காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் 67 ஆம் ஆண்டு விழா தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் திரளான மாணவிகள் பங்கேற்றனர் இதில் பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் கோப்பைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

   பின்னர் விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில் ஒரு காலத்தில் கல்வி என்பது உயர்ந்த சாதியினர் மட்டுமே கற்க வேண்டும் என்ற நிலையில் இருந்தது அதனை பெரியார் அண்ணா போன்றவர்கள் போராடி மாற்றிய தன் விளைவாக தற்போது அனைத்து சமுதாய மக்களும் சமமாக கல்வி கற்க முடிகிறது.

  இது தான் திராவிடமாடல்  அனைவரும் கல்வி கற்கின்றனர் அதற்கு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களும் ஏற்றத்தாழ்வில்லாமல் கல்வி வழங்குவது தான் காரணம் என பேசினார்

   பின்னர் விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் தமிழகத்தில் எப்போது ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழி கொள்கை தான் ஹிந்திக்கு இடமில்லை.

 ஒரு ஆளுநரின் வேலை அரசு அனுப்பும் கோப்புகளில் கையொப்பம்  இட வேண்டும் ஆனால் அதைவிடுத்து அவர் மூன்றாவதாக சமஸ்கிருதம் படியுங்கள் என்று கூறுகிறார்.

  இது அரசியல் சட்டத்திற்கு வரம்பை மீறி மூன்றாவதாக சமஸ்கிருதம் படியுங்கள் என்பதை சரியில்லை அந்த கவர்னராக இருந்தாலும் இதனை சொல்ல கூடாது.

 அதனால் தான் அம்பேத்கர் ஆளுநர்கள் இரண்டு மூன்று மாநிலங்களுக்கு ஒருவர் இருந்தால் போதுமானது என கருத்தை கூறினார் ஆனால் தற்போது ஊருக்கு ஒரு கவர்னர் என ஆகிவிடும் போல் உள்ளது என பேசினார்.