அண்ணாமலையின் புஸ்ஸ்ஸ்ஸ் பேட்டி! நாகரீகம் இல்லாத மனுஷன்!

அண்ணாமலையின் புஸ்ஸ்ஸ்ஸ் பேட்டி! நாகரீகம் இல்லாத மனுஷன்!

 ம.பா.கெஜராஜ்,

  ஏப்ரல் 14- தமிழ் புத்தாண்டு தினத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்று பாஜக வின் தமிழ்நாட்டுக்கான தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இப்படி மாற்று கட்சியினர் மீது ஊழல் புகார் வாசிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, என்றாலும் அவர் அறிவித்தபடியே செய்தியாளர்களை சந்தித்தார். ஓப்பனிங்கிலேயே செய்தியாளர்களுக்கு நாக் அவுட் தந்தார். அதாவது இங்கு நான் தான் பேசுவேன், செய்தியாளர்கள் ஒரு வாரம் கழித்தே என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னார்.

 அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் முதல்வரும் தமிழர்களின் அடையாளமான கலைஞரை மையப்படுத்தி நாகரீகம் இல்லாத சொல்லை உபயோகித்தார்.

 அது பலரின் முகத்தை சுளிக்கவைத்தது.

சரி ஊழல் பட்டியலில் அப்படி என்னதான் சொல்லபோகிறார் என்று ஆவலுடன் காத்திருந்த நிருபர்களுக்கு வீடியோவாக சில காட்சிகளை காட்டி அதில் சில பணப்பட்டியலை வெளியிட்டார்.

  அப்படி பட்டியலிடப்பட்டவர்களில் பலர் பல தேர்தலை சந்தித்தவர்கள், அவர்கள் பல தேர்தல்களில் வேட்பு மனுவிலேயே இது போன்ற பல விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். வருமான வரி செலுத்தக்கூடியவர்கள், ஆக அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியலில் பெருசாக ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

 குறிப்பாக திமுக வுக்கு மாற்று கட்சி பா.ஜ.க.தான் என்பதை மையப்படுத்தியே அண்ணாமலை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அதாவது அதிமுக செயல்படக்கூடிய எதிர்கட்சி பாத்திரத்தை அரசியல் யுக்தியாக அண்ணாமலை தன்வயப்படுத்த முயன்றுள்ளார்.

 எனவே நாம் இந்த கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைபோல் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை! ஏன்னா இதெல்லாம் ஆங்கில வார இதழான தி வீக்கில் ஏற்கனவே வெளியானது ஆகும்.

 அண்ணாமலையும் அதிலிருந்து சில படங்களையும் சில புள்ளி விவரங்களையும் எடுத்து அப்படியே வெளியிட்டுள்ளார்.

 ஆக அதில் புதுசா ஒன்றும் இல்லாமல் போனதால் அந்த பேட்டியானது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆனது தான் மிச்சம்.

 இந்த லட்சணத்தில், தமிழகத்தின் ஆண்டு வருவாய் மதிப்பை விட தி.மு.க.வினரின் பினாமி சொத்துக்களின் மதிப்பு அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ.யிடம் நேரில் புகார் அளிக்க உள்ளேன்.

 தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தி.மு.க.வினரின் முதல்கட்ட சொத்து பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளேன். அடுத்தடுத்து மேலும் பலரின் சொத்து விவரங்களை வெளியிட உள்ளேன். சொத்து பட்டியல் 4 பாகங்களாக உள்ளன. அனைத்தையும் விரைவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை பேட்டியில் சொன்னார்.

குறிப்பு:- பேட்டியின் துவக்கத்தில் அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச்சை வாங்கியதற்கான ரசீதை காட்டி அதை தன் நண்பரிடமிருந்து வாங்கியதாக சொன்னார். அதை அவர் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த போது வாங்கவில்லை என்பதற்கான ஆதாரமாக ரசீதை பயன்படுத்திக் கொண்டார்.