மாணவிகள் விஷயத்தில் அலட்சியமா? அமைச்சர் கடுப்பு!!

மாணவிகள் விஷயத்தில் அலட்சியமா? அமைச்சர் கடுப்பு!!

கு.அசோக்,

  ஊட்டியில் மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான செவிலியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் பேட்டி.

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட வள்ளுவம்பாக்கம் பகுதியில் ரூபாய் 78 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய துணை சுகாதார நிலையத்தினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.

   தொடர்ந்து அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.காந்தி வழங்கினர்.

  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்  ஊட்டியில் அளவுக்கு அதிகமான சத்து மாத்திரைகளை உட்கொண்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு செவிலியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீதும் தற்காலிக பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

   மேலும் மாணவிகள் விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட பள்ளி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தமிழக மட்டுமல்லாது நாடு முழுவதும் தற்பொழுது கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாகவும், 40 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தற்பொழுது தமிழகத்தில் கையிருப்பு உள்ளதாகவும் பொதுமக்களுக்கு பிரத்யேகமாக கட்டாயம் தேவைப்பட்டால் பூஸ்டர் தடுப்பூசிகள் வரவழைத்து தரப்படும் என கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.