வாக்காளர் பட்டியலில் தவறிருந்தால் ஏழு நாட்களுக்குள் சுட்டிக்காட்டுங்கள்! ஆட்சியர் அறிவிப்பு!

கு.அசோக்,
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
மேற்படி சிறப்பு சுருக்க திருத்தப்பணி மேற்கொள்வதற்கு முன்பாக, வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அதன்படி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார்.
பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில் இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர், நகராட்சி ஆகிய அலுவலங்களிலும் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சி பிரிதி நிதிகளுடன் கூட்டம் நடத்தி ஆலோசனை பெறப்பட்டது.
இந்த பட்டியல் குறித்து தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என யாரேனும் ஆட்சேபனை இருந்தால் இந்த பட்டியல் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர் உதவி அல்லது மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டுமென தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நேர்முக உதவியாளர் விஜயராகவன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜராஜன் மற்றும் பாத்திமா, தேர்தல் வட்டாட்சியர் கணேசன், மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்..