செட்டப் தீ விபத்தா?

செட்டப் தீ விபத்தா?

ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர்  அருகே ஷூ தொழிற்சாலையின் தோல் கழிவுகள் மற்றும் அட்டைப்பெட்டி தேக்கி வைக்கும் குடோனில் தீ விபத்துனேற்பட்டது. இது செட்டப்பா என்று பலரும் சந்தேகிக்கிறார்கள்.

   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், ஜமீன் பகுதியில் செயல்பட்டு வரும் (சாரா ஷுஸ்)  தொழிற்சாலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனா.

 அப்படியிருக்க, நேற்று பணி முடிந்து தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் இரவு நேரத்தில்  தொழிற்சாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  கொட்டும் மழையிலும் தீ மளமளவென என பற்றி எரிந்ததால் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

  தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டதால் தீயை அனைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு பின்னர் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 இந்நிலையில் ஷூ மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இது போன்ற தீ விபத்து தொடர்வதால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படுகின்றதா  அல்லது வருமான வரித்துறை காண்பிப்பதற்காக தொழிற்சாலை நிர்வாகமே தீ விபத்தை ஏற்படுத்தினரா  என பலரும் சந்தேகிக்கின்றனர்.

இதே கோணத்தில் ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்