இராணிப்பேட்டை கலெக்டரின் ஆய்வு!

இராணிப்பேட்டை கலெக்டரின் ஆய்வு!

கு.அசோக்,

 ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகளை குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டார்

 இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வரும் பணிகளின் திட்ட வரைபடங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டார்.

 மேலும் தினசரி அங்காடி கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்ட அவா,¢ அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மற்றும் குடிசை வீடுகளுக்கு மாற்றாக  கட்டப்பட உள்ள அரசு தொகுப்பு வீடுகளுக்கான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று பார்வை இட்டு ஆய்வினை மேற்கொண்டார்

   இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் என ஏராளமானோர் உடன் பங்கேற்று இருந்தனர்.