வந்தே பாரத்தில் வெடித்த செல்போன்ஸ்! ஜஸ்ட் மிஸ்!

ஜி.கே.சேகரன்,
வந்தே பாரத் ரயிலில் சார்ஜர் போட்ட பயணியின் செல்போன் வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்களின் துரித நடவடிக்கையால் விபத்து தடுக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று செவ்வாய் மைசூர் நோக்கி சென்ற போது அந்த ரயில் ஆம்பூரை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெட்டி எண் சி-11 பெட்டியில் பயணம் செய்த குஷ்நாத்கர் என்ற பயணி அவரது செல் போனை ரயிலில் சார்ஜர் போட்டிருந்தார்.
அப்போது சார்ஜர் போடப்பட்ட செல் போன் திடீரென வெடித்து புகை வந்ததால் பயணிகள் கூச்சலிட்டடுள்ளனர்.அதை தொடர்ந்து அந்த ரயில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பின்னர், ரயில்வே ஊழியர்கள் செல்போன் சார்ஜர் வெடிக்கப்பட்ட பெட்டியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அரை மணி நேரம் அங்கேயே ரயில் நிற்கவைக்கப்பட்டது. பின்னர் தாமதமாக புறப்பட்டு சென்றது இதனால் ரயில் பயணிகள் மத்தியில் பீதியும் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.