ஹவுசிங் போர்டு வீட்டை உள்வாடகைக்கு விட்ட அரசு ஊழியர்கள்! தடாலடி நடவடிக்கையால் பதற்றம்!

கு.அசோக்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு பகுதியில் 23 குடியிருப்பு பகுதிகளை உள் வாடகைக்கு விடப்பட்டிருப்பதை அறிந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் துறை சார்ந்த அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றி பூட்டி சீல் வைத்தனா. ¢குடியிருப்புகளை வாடகைக்கு விடப்பட்டுள்ள நபர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், காரை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 156 வீடுகள் உள்ளன.
இந்த நிலையில் அரசு ஊழியர் வாடகை குடியிருப்பு பகுதிகளில் 23 குடியிருப்பு பகுதிகளில் அரசு ஊழியர்கள் அல்லாத வேறு சில நபர்கள் வாடகைக்கு குடியிருந்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை சார்ந்த அதிகாரிகள் உரிய விசாரணையை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 23 குடியிருப்பு வீடுகளையும் காலி செய்ய வேண்டும் என கடிதம் வழங்கி கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
அப்படி வழங்கப்பட்ட இந்த கால அவகாசம் நிறைவு பெற்ற பின்னும் 23 குடியிருப்பு வாசிகள் காலி செய்துக்கொண்டு போகவில்லை.
எனவே, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய துறை சார்ந்த அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியோடு 23 குடியிருப்பு பகுதிகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
முன்னதாக அவர்கள் உடமைகளை வெளியே எடுத்து வைத்தனர்.