மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி ஆர்பாட்டம்!

கு.அசோக்,
மருத்துவ காப்பீடு திட்டத்தில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டி கோரிக்கை முழக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.