இராணிப்பேட்டை தான் மோசமான நகரம்! சொல்கிறார் பாஜக திருப்பதி நாராயணன்!

கு.அசோக்,
இந்தியாவிலேயே மோசமான மாசடைந்த நகரம் இராணிப்பேட்டை தான் என்று பாஜக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பட்ஜெட்டில் எங்களுக்கு ஒன்றுமே இல்லை அப்படின்னு சொல்றாரு. அவர் சொல்றது அவருக்கு சரிதான், ஆனால் திமுகவிற்கு ஒன்றுமில்லை என்பதை நான் ஏற்று கொள்கிறேன்.
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மக்களுக்கான திட்டங்கள் அதாவது உள்கட்டமைப்பு திட்டங்கள் என தெரிவித்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பட்ஜெட் பற்றி பேசாமல் ஜாதி ரீதியாக பேசிய வருவதாக கூறினார்.
அதேபோல் தமிழகத்தில் எல்லா திட்டங்களிலும் ஊழல் மற்றும் லஞ்சம் தான் இருக்கு எனவும், பாஜக அரசு பட்ஜெட்டில் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு இடமே இல்லை என கூறினார்.
இந்தியாவிலேயே மோசமான மாசடைந்த நகரம் இராணிப்பேட்டை தான் அந்த வகையில் மாசடையாமல் இருக்க என்ன செய்தார்கள்? ஆட்சியில் வந்ததிலிருந்து இங்கு உள்ள மாவட்டத்தின் அமைச்சர் மேற்படி கழிவுகளை அகற்ற என்ன நடவடிக்கை மேற்கொண்டார்.
இதைப்பற்றி சட்டமன்றத்தில் பேசுவதில்லை என கேள்வி எழுப்பி ஆபத்தை நோக்கி இராணிப்பேட்டை உள்ளதா இல்லையா என்றும் தமிழக பட்ஜெட்டில் ராணிப்பேட்டைக்கு ஏதாவது உள்ளதா? இராணிப்பேட்டை நகராட்சியில் பயனற்ற நிலையில் உள்ள குடிநீரை சரி செய்யாத இங்கே அமைச்சர் ஏன் இருக்கிறார்.
பொதுவாக மோடி அவர்களால் போடப்பட்ட பட்ஜெட் ஏழை எளியவர்கள் வாழ்விற்கும் மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கும் விவசாயிகளுக்கும் இளைஞர்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு திட்டம் ஆகும் இவ்வாறு கூட்டத்தில் பேசினார்.