மணல் பதுக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர்!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,
தொட்டதுக்கெல்லாம் கொடிபிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக மணல் பதுக்கி சிக்கியிருக்கிறார்.
ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் 184 யூனிட் ஆற்று மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, ஆகையால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளருக்கு சொந்தமான இரண்டு இடங்களுக்கு வருவாய் துறையினர் சென்று மணலை பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரில் டூ வீலர்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வந்தது.
இது குறித்து வட்டாட்சியர் ராமச்சந்திரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,
மணல் பதுக்கி வைத்தவர்களிடம் நடத்திய விசாரணையில், சேத்தூர் பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ராஜா என்ற கருப்பையாவுக்கு சொந்தமான இடங்களில் ஆற்று மணல் மொத்தமாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து ராஜா என்ற கருப்பையாவுக்கு சொந்தமான ராஜபாளையம் செல்லும் வழியில் உள்ள இடம் மற்றும் மேட்டுப்பட்டி செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபான கூடத்திற்கு எதிரே உள்ள இடத்தில் ஆய்வு செய்தனர்.
அங்கு புதியதாக கட்டப்படும் கட்டடத்திற்கு உள்ளேயும், திறந்த வெளி குடோனிலும் 184 யூனிட்டுக்கும் அதிகமான அளவில் ஆற்று மணல் இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 18.40 லட்சம் ஆகும்,
இந்நிலையில் மேற்படி மணல் திருட்டு குறித்து மேல் நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும், மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மற்றும் மணலை பதுக்கி வைத்திருந்த குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் சொன்னார்.
அப்படியிருக்க சட்டவிரோதமான பதுக்கி வைத்திருந்த மணலை பறிமுதல் செய்தனர்.
கணிம வள கொள்ளையை எதிர்த்து கொடிபிடிக்கும் கட்சியே இப்படி மணலை பதுக்கலாமா சார் என்று மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.