நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அரசு! யாரும் பிரியவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே செயல்பட்டதாக தகவல்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் அரசு! யாரும் பிரியவில்லை என்பதை மக்களுக்கு தெரிவிக்கவே செயல்பட்டதாக தகவல்!

ம.பா.கெஜராஜ்,

 டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சி தற்போது இரண்டாவது முறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் சட்டபேரவையில் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.

 நேற்று  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டபேரவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவந்தார். அதன் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு அரசுக்கு ஆதரவாக 54 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.  இதனால் ஆம் ஆத்மி அரசு வெற்றி பெற்றுள்ளது.   

  இது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை. இரண்டு எம்எல்ஏக்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு உடல்நிலை சரியில்லை, சிலர் வெளியூரில் உள்ளனர்".

  டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 இடங்களும், பாஜகவுக்கு 8 இடங்களும் உள்ளன.  டெல்லி அரசை கவிழ்க்கும் சூழ்ச்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தனது கட்சி எம்எல்ஏக்களை அக்கட்சி விலை பேசுவதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

  அப்படியிருக்க கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசும்போது, "எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு, ரூ.25 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

பொய் வழக்குகள் பதிவு செய்வது மற்றும் மாநில கட்சிகளை உடைத்து ஆளும் அரசை கவிழ்ப்பதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதுபோன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர்களையும் கைது செய்ய நினைக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால் அரசை கவிழ்க்க நினைக்கிறார்கள்.

 எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் பிரிந்து செல்லவில்லை. எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன் மொழிகிறேன்.

பாஜகவை பொறுத்தவரை டெல்லியில் ஆபரேஷன் லோட்டஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. மதுபான கொள்கை விவகாரத்தை மோசடி போல் சித்தரித்து எங்கள் கட்சியை உடைத்து ஆட்சியை கவிழ்ப்பதே பாஜகவின் திட்டம். அவர்களின் உண்மையான நோக்கம் விசாரணை நடத்துவது அல்ல. ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை கைது செய்து ஆட்சியை கவிழ்ப்பதே" என்று தெரிவித்திருந்தார்.

 இந்த சூழலில்  இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு 54 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது பாஜகவுக்கு ஜனநாயக ரீதியில் பதிலடி கொடுத்திருக்கிறார்.