தேர்தலில் தனித்தே போட்டி என்பதை உறுதி செய்த விஜய்!
ம.பா.கெஜராஜ்,
தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதை விஜய்¢ உறுதி செய்தார்.
மேலும் "மதச்சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம்" இதன்மூலம் 'எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை' என்று பேசி குழப்பங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
தவெக தலைவர் விஜய் நேற்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து, பல்வேறு வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அந்தக் கூட்டணி, இந்தக் கூட்டணி என பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்கள். தவெக எந்த டீமிலும் இல்லை. மக்கள் டீமில் தான் இருக்கிறது
இது தெரிந்ததும் வேறு என்ன அவதூறு பரப்பலாம் என யோசித்தனர்.
தவெக தலைமையில்தான் ஆட்சி அமையும் என முன்பே சொல்லிவிட்டோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
மதச்சார்பற்ற கொள்கை, மற்றும் மதச்சார்பற்ற சமூக நீதியில் தவெக உறுதியாக உள்ளது. அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்தவித சமரசமமும் வைத்துக்கொள்ள போவதில்லை. இது குறித்த பேச்சுகே இடமில்லை.
யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த டார்கெட்டை அடைய முடியும்" என்று சொன்னார்.

admin
