அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்த போதை ஆசாமிகள்!
கு.அசோக்,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார் சம்மலால் என்பவருக்கு சொந்தமாக கொரட்டி பகுதியில் விவசாய நிலம் உள்ளது. எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் காளியப்பன் நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஒரு ஏக்கர் அளவில் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளார்.
கரும்பு அறுவடை செய்வதற்காக ஏதுவாக பருவம் அடைந்து இருந்தது. அறுவடைக்காக வட மாநிலத்தவர்களையும் வரவழைத்து தயார் நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய நிலத்தின் அருகே காலி மனை உள்ளது அங்கு மது அருந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிகரெட் புகைத்து அதன் தீயை கரும்பு தோட்டத்தில் வீசி சென்றனர்.
இதன் காரணமாக கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிந்தது.இதனை அறிந்த காளியப்பன் மற்றும் அறுவடை செய்ய வந்திருந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர்.இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.