வெட்டி தோண்டிய மரம் மீண்டும் நடப்பட்டது!!

ஜி.கே.சேகரன்,

  வெட்டிய மரத்தை  இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் பசுமை தாயகம் சார்பில் மீண்டும் நடப்பட்டது-பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று மரத்தை மீண்டும் நட்டு தண்ணீர் பாய்ச்சினர்.

 இராணிப்பேட்டை  மாவட்டம், இராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக வெட்டி சாய்க்கப்பட்ட அரச மரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு உயிர் கொடுத்தனர்.

பாமக மேற்குமாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் மரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சற்று தூரம் தள்ளி அங்கேயே நட்டனர். இதில் பசுமைதாயகம் பொறுப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட திரளான பாமகவினர் மற்றும் பசுமைதாயகம் அமைப்பினர் மற்றும் பிற கட்சியைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள் பங்கேற்று மரத்தை நட உதவிபுரிந்தனர்..