போட்டுத் தாக்கும் ஏ.சி.சண்முகம்!கட்சி மாநாட்டுக்கு போதை பொருள் கடத்தல் கும்பல் நிதி கொடுப்பதாக பகீர்!

ஜி.கே.சேகரன்,

தமிழகத்தில் போதை பொருள் கடத்தலில் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளவரே தொடர்பு என்பதால் அவரை கைது செய்வதில் காவல்துறை தயக்கம் காட்டுகிறது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - இளைஞர்களை சீரழிக்கும் சிந்தடிக் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி.

வேலூர்மாவட்டம், வேலப்பாடியில் மருத்துவ முகாம் ஏ,சி.எஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் நடந்தது. இதனை பார்வையிட்டு பின்னர் ஏ.சி.சண்முகம் அரியூர் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்

 பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில் போதை பொருட்களை டெல்லி காவல்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்ததில் தமிழகம் கொண்டு செல்வதாக சொல்லியிருக்கிறார்கள். மேலும் வங்ககடலில் பிடிப்பட்டவையும் தமிழகம் எடுத்துச் செல்லப்படுவதாக சொன்னார்கள்.

  திமுகவில் பெரிய பொறுப்பில் அயல் நாட்டு தொடர்பாளராக உள்ள சாதிக் போன்ற நூற்றுக்கணக்கானோர் போதை பொருள் வியாபாரிகளாக வளம் வருகிறார்கள். இது நாட்டை துண்டாடி இளைஞரை அழிக்கிறது, மதுவால் ஏற்படும் பாதிப்பை காட்டிலும் கொக்கைன் போன்ற சிந்தடிக் டிரக் மிகெப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். போதை வஸ்த்தை பயன்படுத்தப்படுபவர்களின் மூளையை மங்க செய்து 3 வருடத்தில் இளைஞர்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது.

  போதை பொருட்கள், பள்ளி - கல்லூரி வரையில் விற்கபடுகிறது. கிளப்புகளில் தொடங்கி பல இடங்களுக்கு பரவி இளைஞர்களை நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல இது வழி வகுக்கிறது.  இதற்கு சாதிக் போன்ற பலவிதமான தீய சக்திகள்  ஈடுபடுவது கவலை தரக்கூடியது ஆகும்.

  அவர்கள் அரசுக்கு நிதி, மாநாட்டுக்கு நிதி கொடுக்கின்றனர். ராஜா போல் வளம் வந்து போதையை விற்று நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றனர். சாதிக் உதயநிதி தொடர்பு வைத்திருந்துள்ளார்.டிஜிபியுடன் தொடர்பு ஏற்படுத்தியிருந்துள்ளார். ஆகவே அவர்களை யாரும் கைது செய்ய முடியாத நிலை?!

  சாதிக்கை போல் ஆயிரக்கணக்கேனோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

   அன்றாடம் போதை பிரச்சணை வருகிறது தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது. குடும்பம் அழியும், இளைஞர்கள் அழிவார்கள், இதனை எல்லாம் தடுக்க வேண்டும். ஆகையால் குடியாத்தம் வேலூர் ஆம்பூர் ஆகிய தொகுதியில் போதை ஒழிப்பு மாராத்தான் நடத்தவுள்ளோம்.

 கடன், வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவைகளுக்கு  போதை பழக்கமே காரணம். இந்த போதை பொருட்களை அடியோடு ஒழிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.