ராகுல் காந்தி மீண்டும் வயநாடில் போட்டி! 39 வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்!

 உ.சசிகுமார்,

 2019 ஆண்டு மக்களவை தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டு வென்றார். இம்முறை அங்கு அவர் போட்டியிடமாட்டார் என்று கூறிவந்த நிலையில், வயநாடில் ராகுல்காந்தி போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது.

  அதே போல் மொத்தம் 39 வேட்பாளார் பட்டியலை வெளியிட்டிருக்கிறதுமேலிடம். அந்த வகையில் கர்நாடகாவில் ஷிமோகா தொகுதியில் நடிகர் சிவராஜ்குமார் மனைவி கீதாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலங்கானா, கேரளா, கர்நாடகா உள்பட 9 மாநில வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

  கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கொண்ட காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி டெல்லியில் நேற்றுமுன்தினம் மாலையில் கூடி ஆலோசனை நடத்தியது.

  அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் தேர்தல் கமிட்டியில் அங்கம் வகிக்கும் அம்பிகா சோனி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டி.எஸ்.சிங்தியோ, முகமது ஜாவைத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

  இதில், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவான மாநிலங்களில் இருந்து வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பட்டியல் வெளியிடப்பட்டது.   

   கட்சி பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், அஜய் மாக்கன், பவன் கேரா ஆகியோர் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர்கள் முதல் பட்டியலை வெளியிட்டனர். அந்த பட்டியலில் மொத்தம் 39 பேர் இடம் பெற்று இருந்தனர்.

கேரளா 16

கர்நாடகா 7

சட்டீஸ்கர் 6

தெலங்கானா 4

மேகாலயா 2

நாகாலாந்து 1

சிக்கிம் 1

லட்சத்தீவு 1

திரிபுரா 1

   ராகுல்காந்தி மீண்டும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்றும்,  சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகெல் அங்குள்ள ராஜ்நந்த்கான் தொகுதியிலும், பெங்களூரு புறநகர் தொகுதியில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார்.

 ஷிமோகா தொகுதியில் நடிகர் சிவராஜ்குமார் மனைவியும், முன்னாள் முதல்வர் பங்காரப்பா மகளுமான கீதா நிறுத்தப்பட்டுள்ளார்.

   பாஜக. கடந்த 2 ஆம் தேதியே 195 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.