கட்டத்தப்பட்டதாக நாடகமாடிய 9 ம் வகுப்பு மாணவிகள்!

  ஜி.சாந்தகுமார்,

  தங்களை சிலர் கடத்திவிட்டதாக 9ம் வகுப்பு மாணவிகள் நாடகமாடியதை போலிசார் கண்டுபித்தனர்.

 சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் 2 சிறுமிகள் அழுதுக்கொண்டிருந்தனர். தங்களை கடத்தல் கும்பல் கடத்தியதாகவும், தற்போது இங்கே விட்டுச் சென்றுவிட்டதாகவும் எங்களை காப்பாற்றுங்கள் என்று கதறினர். 

  இதுகுறித்து பூக்கடை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடம் விரைந்து மாணவிகளை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

  விசாரணையில், அப்போதுதான் மாணவிகளை யாரும் கடத்தவில்லை என்பதும், அவர்கள் வீட்டில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுவெளியேறியதும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவிகளின் பெற்றோரை நேரில் வரவழைத்து 2 மாணவிகளையும் போலீஸார் அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

  தோழியை திட்டியதால் இரண்டு மாணவிகள் சேர்ந்து இந்த கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

  புதுச்சேரி சோகமே இன்னும் அகலவில்லை, இந்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கவனமாக அனுக வேண்டும் அல்லவா?