மைசூர் பாக் கொடுத்து சிறுமியை?

ஜி.கே.சேகரன்,
ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு மைசூர் பாக் கொடுத்து உடலுறவு கொண்ட ஸ்வீட் கடை சரக்கு மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது - ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பலமுறை உடலுறவு கொண்ட ஸ்வீட் கடையில் வேலை பார்க்கும் சரக்கு மாஸ்டரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமிரி அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (38). வேலூரில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி உஷா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறியதுடன், அடிக்கடி மைசூர்பாக் கொடுத்து தனது வீட்டிற்கு வரவைத்து பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
சிறுமியை நடத்தையில் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தது போது நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்கள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை ஏமாற்றியது உறுதியானதை தொடர்ந்து, மோகன்தாஸை போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.