ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை பத்து நாட்களில் மீட்பதாக வட்டாட்சியர் உறுதி! ஏர் உழும் போராட்டம் தற்காலிக வாபஸ்!

ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை பத்து நாட்களில் மீட்பதாக வட்டாட்சியர் உறுதி!  ஏர் உழும் போராட்டம் தற்காலிக வாபஸ்!

 உ.சசிகுமார்,

 ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலத்தை பத்து நாட்களில் மீட்டு ஒப்படைப்பதாக பேரனாம்பட்டு வட்டாட்சியர் வாக்குறுதி தெரிவித்துள்ள நிலையில், ஏர் உழும் போராட்டத்தை சமூக சமத்துவ படை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளது.

  வேலூர் மாவட்டம், பேரனாம்பட்டு வட்டத்துக்குட்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள டி.சி.லேன்ட் எனப்படும் பஞ்சமி நிலங்களை மீட்டு, அவற்றை உரியவர்களுக்கு அளந்து கொடுத்திட வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. சமூக சமத்துவ படை கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.குணசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சம்மந்தப்பட்ட நிலத்தில் ஏர் உழுவதற்கு ஆயத்தமாக மக்கள் திரண்டிருந்தனர்.

  இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, இந்நிலையில் பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், வட்டாட்சியார் நெடுமாறன் மற்றும் கீதா வருவாய் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்ய முயன்றனர்.   அதில் இன்னும் பத்து நாட்களின் நிலங்களை அளந்து கொடுப்பதாக சுமுகமான முறையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட தலைவர் குண்டு(எ)கதிரவன் வரவேற்புரை ஆற்றினார். எஸ்.வினோத்குமார் (சாமியார்) மாவட்டத் துணைச் செயலாளர் , முல்லை.ஆஜி பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர், எஸ்.கார்த்தி , பேர்ணாம்பட்டு நகர செயலாளர்  ஆ.செந்தில்குமார் பேரணாம்பட்டு நகர தலைவர், எஸ்.மனோகரன், கே.கிருஷ்ணமூர்த்தி  ஜே.மணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

 இராசி.தலித் குமார் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர், வழக்கறிஞர் நேயர் சுந்தர், தமிழ்நாடு அம்பேத்கர் மன்ற மாநிலச் செயலாளர்  ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் இறுதியில் சங்கர் கணேஷ், யாகாதேவ், வெங்கடேசன் (எ)டோலு குடியாத்தம் ஒன்றிய செயலாளா, சங்கர் குடியாத்தம் நகர செயலாளர் சூர்ய பிரபு நகர து செயலாளர் நன்றியுரை கூறினார்கள்.

 சமூக சமத்துவபடையின் சார்பில் கடந்த எட்டு ஆண்டுகளாக பஞ்சமி நிலங்களை மீட்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இவர்கள் எந்த நிலத்துக்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ அந்த நிலங்களில் மாற்று சமுதாயத்தினர் விளைசசலை செய்து பணம் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 அப்படின்னா அதிகாரிகள்? வழக்கம் போலதான்!!!!