இதய நோயாளியை குறித்து இதயமே இல்லாமல் பேசுகிறார் எடப்பாடி! ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவரைப் பற்றி இதயமே இல்லாமல் பேசு
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள கருத்துக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார். மாரடைப்பு எப்போது யாருக்கு வரும் என்பது தெரியாது; அதனால் அதை நாடகம் எனக்கூறுவது தவறு.
விசாரணை என்பது மனித நேயத்துடன் நடைபெற வேண்டும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை.
விசாரணையின் போது செந்தில் பாலாஜிக்கு குடிக்க தண்ணீர் கூட தரவில்லை.
உடல் நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு?. மாரடைப்பு குறித்து தெரியாதவர் எப்படி முதலமைச்சராக இருந்தார்.
இஎஸ்ஐ மருத்துவமனை அறிக்கையை எடப்பாடி பழனிசாமி கொச்சைபடுத்தியுள்ளார். இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவரைப் பற்றி இதயமே இல்லாமல் பேசுகிறார்.
அமலாக்கத்துறை அதிகாரி போல் எடப்பாடி பழனிசாமி தன்னை நினைத்துக் கொள்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 1 கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டவர்கள் தான் அதிமுகவினர்.
திமுக அரசுடன் மோத தயாராகி விட்டோம் என கவர்னர் மூலம் மத்திய அரசு உணர்த்துகிறது.
செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான். பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல.
அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை நிரூபித்து காட்டியுள்ளது. முதல்-அமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாத எடப்பாடி பழனிசாமி விசாரணை அதிகாரி போல் பேசியுள்ளார். திமுக. அமலாக்கத்துறை சோதனை பற்றி எந்த விதத்திலும் திமுக கவலைப்படவில்லை என்று கூறினார்.