கடத்தல்காரர் சாதிக் அமைத்துக் கொடுத்த கண்காணிப்பு கேமிராக்கள் அகற்றப்படுமா!

ஜி சாந்தகுமார்,
போதை பொருள் கடத்தல்காரர் ஜாபர்சாதிக் சென்னையில் சாலைகளில் அமைத்துக்கொடுத்துள்ள கண்காணிப்பு கேமிராக்களை அகற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்திய சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர்சாதிக் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் ஏற்கனவே அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட சம்மனை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர்சாதிக் வீட்டிலும், புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஒட்டப்பட்டு உள்ளது.
இது ஒருபக்கம் இருக்க போதை கடத்தல் வழக்கில் சிக்கியிருக்கும் ஜாபர் சாதிக் சென்னை காவல் துறை பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களை பொறுத்த உதவியிருக்கிறார். அப்படியிருக்க அவர் அமைத்துக்கொடுத்த கேமிராக்களை அகற்ற காவல் துறையினர் முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.