நீதிமன்ற வழிகாட்டுதல்படி பலக்லை ஊழல் பதிவாளர் இன்று சஸ்பெண்டு செய்யபடுவாரா?

ம.பா.கெஜராஜ்,
சேலம் பல்கலைகழக பதிவாளர் இன்று பணி ஓய்வு பெறுகிறார். ஆனால் அவர் மீது ஊழல் புகார்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் இன்று அவர் சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பதிவாளராக இருப்பவர் தங்கவேலு. இவர் கணினி மென்பொருள் மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்கியதில் ஊழல், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைக்கு, அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு எனரவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஊழல் புரிந்த பதிவாளர் தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்யுமாறு உயர்கல்வித்துறை செயலாளர், துணை வேந்தர் ஜெகநாதனுக்கு 2 முறை கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் உயர்கல்வித்துறை செயலாளரின் கடிதத்தை, துணை வேந்தர் ஜெகநாதன் பொருட்படுத்தவேயில்லை.
அப்படியிருக்க ஊழல் செய்த பதிவாளருக்கு துணை வேந்தர் துணை போவதாக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர். ஆசிரியர் சங்கமும், தொழிலாளர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், நேற்று காலை, மாலை என பல்கலைகழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் துணை வேந்தருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அரசு பரிந்துரையின்படி அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் துணை வேந்தர் மதிக்காமல் பதிவாளர் தங்கவேல் தொடர்ந்து பணியமர்த்தபட்டுள்ளார்.
ஊழல் புகார் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் நடவடிக்கைக்கு ஆளாகாமலேயே இன்று ஓய்வு பெறவுள்ளார். ஒருவேளை மாலைக்குள் அவர் சஸ்பெண்டு செய்யப்படலாம் என்று தெரிகிறது.