நளினி தங்கும் வீட்டருகே பட்டாசு!தமிழ் அமைப்பினர் கூடினர்!!

ஜி.கே.சேகரன்,
காட்பாடி பிரம்மபுரத்தில் பரோலில் நளினி தங்கியுள்ள வீட்டின் அருகே நளினி விடுதலையை கொண்டாடும் வகையில் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நளினி உட்பட ஆறு பேர் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் நளினி பரோலில் இருந்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு நளினி உட்பட ஆறு பேருக்கும் பொருந்தும் என தீர்ப்பளித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதை அடுத்து இன்று நளினி பரோல் காரணமாக தங்க வைக்கப்பட்டுள்ள காட்பாடி பிரம்மபுரம் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்களும், தமிழ் அமைப்பினர் சிலரும் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.