வாங்க வந்தே பாரத் வாங்க!

வாங்க வந்தே பாரத் வாங்க!

  ஜி.கே.சேகரன்,

திருப்பத்தூர்மாவட்டம்,ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலின் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்திலும் 2-வது சேவை டெல்லி - காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும் 3-வது சேவை மும்பை - காந்தி நகர் வழித்தடத்திலும்,4-வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

  இந்நிலையில், இதன் 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது.இந்த சேவையை பிரதமர் மோடி கே.எஸ்ஆர்.பெங்களூரு ரயில் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.இந்த ரயிலானது சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய ரயில் மீண்டும் மைசூரில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய ரயில் இந்த வழித்தடத்தில் ஜோலார்பேட்டை காட்பாடி வழியாக அதிவேக ரயிலாக செல்கிறது மணிக்கு 180 கிலோமீட்டர் அளவிற்கு வேகமாக பயணிக்க கூடிய இந்த ரயிலை நரேந்திர மோடி அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.

 முதல் நாளான நேற்று அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று சென்றனது.தென்மேற்கு ரயில்வே எல்லையை முடித்துக் கொண்டு தற்போது தென்னக ரயில்வே எல்லையான முதலீடமான ஜோலார்பேட்டை வந்து புறப்பட்டது.

  அப்போது ரயில்வே ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் ரயில் காண்பதற்கு ஆர்வத்தோடு நின்றிருந்தனர்.