தண்ணிகாட்டும் புலி..பதுங்கிவிட்டது?!!

அ.ராகுல்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர் சோலை - அருகே தேவன் - 1 பகுதி முதுமலை, ஸ்ரீமதுரை ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட மாடுகளையும், 4 மனிதர்களையும் டி23 என்கிற புலி அடித்துக் கொன்றது.
இந்நிலையில், நேற்று சிங்காரா வனப்பகுதியில் எருமை ஒன்றைப் ஆட்கொல்லி புலி தாக்கி கொன்றது. மேலும் உள்ளூர் வாகன ஓட்டுநர் ஒருவர், அந்தப் புலியை சிங்காரா மின்நிலையம் அருகே பார்த்ததாகக் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அதற்காக களம் இறக்கிவிடப்பட்டிருக்கிற தமிழக வனத்துறையினர் மற்றும் கேரளா ஸ்பெஷல் டீம் ஆகியோர் மயக்க மருந்து அடங்கிய துப்பாக்கி குண்டுகளுடன் சிங்காரா பகுதிக்கு ஓடியிருக்கிறார்கள், ஆனால் தி கிரேட் டி 23 புலி பதுங்கிக்கொண்டது. தன்னை வேட்டையாட வந்தவர்களுக்கு தொடர்ந்து 12 நாட்களுக்கும் கேலாக தண்ணிக்காட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த டி23 புலி விஷயம் சென்னை உயர்நீதிமன்றம் வரை நீண்டிருப்பதால் தனிப்படையினர் அவர்களது ஒவ்வொரு மூவ்மென்டுகளையும் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.