8 கோடியுடன் தலைமறைவான சீட்டு ஏஜெண்டு! எஸ்.பி.ஆபிசில் புகார்!

8 கோடியுடன் தலைமறைவான சீட்டு ஏஜெண்டு! எஸ்.பி.ஆபிசில் புகார்!

 கு.அசோக்,

  சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

 வேலூர் மாவட்டம், வேலூர் சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால், இவர் பொதுமக்களிடம்  ரூ.1.லட்சம் ,ரூ.2 லட்சம் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் சீட்டு நடத்துவதாக பணம் வசூல் செய்து வந்திருக்கிறார்.

 அவர் பல வருடங்களாக இப்படி சீட்டு நடத்தி வந்தார். இதனை நம்பி பொதுமக்களும் ஆர்வமுடன் கோபாலிடம் பணத்தை கொடுத்து சீட்டு கட்டி வந்த நிலையில் கோபால் சுமார் ரூ,8 கோடி அளவுக்கு பணத்தை மக்களிடம் ஏமாற்றி வசூல் செய்துகொண்டு தலைமறைவாகிவிட்டார்.

  இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோபாலை கைது செய்து தங்களின் பணத்தை பெற்றுதருமாறு புகார் அளித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.