திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 8.25 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன்!அமைச்சர் ம.சுப்பிரமணி துவங்கி னார்!

ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 8.25 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி இல்லாததால் தருமபுரி மற்றும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வர் உத்திரவின் பேரில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வாயிலாக திருப்பத்தூர் மாவட்ட மருத்துவமனைக்கு ரூபாய் 8.25 கோடி மதிப்பீட்டில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணி துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், மருத்துவ இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மருத்துவமனைக்கு முன்னுரிமை தரும் வகையில் மருத்துவமனைகளை புதுப்பித்து கட்டி வருகிறோம். திருப்பத்தூரில் பல ஆரம்பசுகாதார நிலையங்களை திறந்துள்ளோம். புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை திருப்பத்தூரில் உள்ளது அதற்கு ஏராளமான புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அப்பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் அவர்களால் திறக்கப்படவுள்ளது இம்மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் பொது சுகாதார ஆய்வகமும் அமையவுள்ளது. மேலும் ரூ.6.25 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இன்று திருப்பத்தூரில் திறந்துள்ளோம்.
இந்த பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க வேண்டுமென்றாலும் வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளிலும் மட்டும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் இருந்து வந்தது தற்போது ஐந்தாவதாக திருப்பத்தூரில் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், கேரளா ஆகிய பகுதிகளிலும் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் உள்ளன அவைகள் பல வகைகளின் திரிபுதான் இது உருமாற்றம் பெற்ற வைரஸ் 3 நாட்கள் அந்த வைரஸ் இருக்கும் பிறகு சரியாகிவிடும் கேரளாவிலும் இந்தவைரஸ் பாதிப்புள்ளது.
நமது தமிழகத்திலும் ஒற்றை இலக்க அளவில் இருந்த உரு மாறிய கொரோனா தற்போது 20 ஆக அதிகரித்துள்ளது. எங்கு எல்லாம் காய்ச்சல் உள்ளது அங்கு கொரோனா பரிசோதனை செய்ய உள்ளோம். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.
1021 காலி பணியிடங்கள் மருத்துவத்துறையில் நிரப்ப உள்ளோம். மருந்தாளுநர்களுக்கும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளது. அதனையும் பரிசீலித்து வருகிறோம் 2242 கிராம சுகாதார செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்ய உள்ளோம் புதியதாக 11 செவிலியர் கல்லூரிகள் துவங்கியுள்ளோம் என கூறினார்.