கஞ்சா கடத்த மிரட்டும் மாமனார் மீது மருமகள் புகார்!

கு.அசோக்,
மாமனார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் - கோழி வண்டி ஓட்டும் என் அண்ணை கஞ்சா கடத்த சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக மருமகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார் அளித்தார்
வேலூர்மாவட்டம், கேவிக்குப்பம் அருகேயுள்ள செஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் திமுக பிரமுகர் வெங்கடேசன். இவரது மகன் கிருபாகரன் என்பவரை ஜான்சிராணி என்ற பெண் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளது.
இந்த நிலையில் மாமனார் வெங்கடேசன் மற்றும் கணவர் கிருபாகரன் ஆகியோர், அந்த வீட்டில் போய் பெண்ணை கட்டிகொண்டோம் என அடிக்கடி மிரட்டி பெண்ணின் அண்ணனான அருண்குமாரிடம் அடிக்கடி பணம் பெற்றுகொண்டு அடிக்கடி ஜான்சிராணியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
அடிக்கடி தாய் வீட்டிற்கு அனுப்பி தொடர்ந்து வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளனர். மேலும் ஜான்சிராணியின் அண்ணன் அருண் கோழி வண்டி ஓட்டுவதால் அவரை கஞ்சா கடத்த சொல்லி ஜான்சிராணியின் மாமனார் வெங்கடேசன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் ஜான்சிராணி கண்ணீர் மல்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குடும்பத்தினர் குழந்தைகளுடன் வந்து புகார் அளித்தார்.