எஸ்.ஆர்.எம்- ல் விரைவில் 5ஜி நெட் ஒர்க்ஆய்வகம் - பிரதமர் மோடி அறிவிப்பு .!

பா.சுரேஷ்,
நாட்டில் 5ஜி வலைப்பின்னல் (நெட் ஒர்க்)பயன்பாட்டை துல்லியமாக பெரும் வகையில் 100, 5ஜி ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதில் ஒரு ஆய்வகம் கட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழிநுட்ப நிறுவனத்தில் அமைக்கப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 7வது இந்திய மொபைல் மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது.இம் மாநாடினை தொடங்கி வைத்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 5ஜி நெட் ஒர்க் தொழில்நுட்பம் சிறந்த முறையில் வழங்க பெரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் 100, 5ஜி நெட் ஒர்க் தொழில்நுட்ப ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. அதில் ஒன்று நாட்டில் சிறந்த உயர் கல்வி நிறுவனமாக விளங்கி வரும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழிநுட்ப நிறுவனத்தில் அமைக்கப்படவுள்ளது.
மத்திய அரசின் தொலைதொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைதொடர்பு துறை மூலமாக இத் திட்டம் செயல்படுத்தப்படும். இப்படி அமைக்கப்படும் ஆய்வகங்கள் மூலமாக 5ஜி தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி பணிகள் உலக அளவில் பயன்படும் வகையில் இருக்கும்.
நாட்டில் சமூக பொருளாதார பகுதிகளாக உள்ள கல்வி, வேளாண்மை,ஆற்றல் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு 5ஜி நெட் ஒர்க்சிறந்த முறையில் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்றார்.அடுத்த கட்டமாக கல்வி நிறுவனங்கள் சுற்று சூழலை பராமரித்து புது தொழில் நிறுவனங்கள் உருவாக 6ஜி நெட் ஒர்க் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது என்றார்.
எஸ்ஆர்எம் ல் அமைய உள்ள 5ஜி நெட் ஒர்க் ஆய்வகம் மூலம் மாணவர்கள் தங்களின் திறமையை பயன்படுத்தி தொலைதொடர்பு மற்றும் பொறியியல் துறைகளில் புதிய வடிவமைப்பு,ஆராய்ச்சிகள் மற்றும் தொழில் தொடங்குவதில் கவனம் செலுத்துவர்கள்.