நிருபர்களை மிரட்டிய திமுக பிரமுகருக்கு "பளார்" விட்ட நாம் தமிழர் இளைஞர்! மக்காசோளம் சாப்பிட்ட தலைவர்!

நிருபர்களை மிரட்டிய திமுக பிரமுகருக்கு "பளார்" விட்ட நாம் தமிழர் இளைஞர்! மக்காசோளம் சாப்பிட்ட தலைவர்!

 ஜி.கே.சேகரன்,

 நிருபர்களை மிரட்டிய திமுக பிரமுகர் ஞானம் என்பவரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுதாகர் என்கிற இளைஞர் "பளார்"ரென்று அறைந்து பாடம் புகட்டினார்.

  வாணியம்பாடியில் நூறுநாள் வேலை திட்டப் பணியாளரை மாற்றக்  கோரிய விவகாரத்தில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட சம்பவமும், திமுக நிர்வாகியை நாம் தமிழர் அறைவிட்ட பிரச்சனையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு ஊராட்சியில் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஞானம் என்பவர் தன்னுடைய தங்கையின் பேரில் பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில் ஞானம் என்பவரை பணி மாற்றம் செய்ய கோரி அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகர் என்பவர் கோரிக்கை வைத்தார்.

 அதன் பேரில் ஊராட்சி நிர்வாகம்,  கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் ஞானம் சுதாகரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டும் தோனியியிலும் அவதூறான வார்த்தைகளால் பேசியதாக கூறப்பட்டது.

 இந்நிலையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுதாகரை திமுக பிரமுகர் ஞானம் கடுமையாக தாக்கியுள்ளார் இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் அங்கு நாம் தமிழர் கட்சியினர் பத்துக்கும் மேற்பட்டோர் கூடினர்.¢ இதனால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினரிடையே  கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகி சுதாகரை கஞ்சா விற்பவன் நீ உனக்கு என்ன பதில் சொல்லவேண்டும் என பொதுமக்கள் மத்தியில் திமுக பொதுமக்கள் ஞானம் கூறியதில் ஆத்திரமடைந்த சுதாகர், திமுக பிரமுகர்  ஞானத்தின் கன்னத்தில் பளார் என அறைந்ததால் அங்கு சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 அப்போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும்  திமுக பிரமுகர்கள் மிரட்டும் தொனியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

 மேலும் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதில் படுகாயமடைந்த சுதாகர் மற்றும் ஞானம் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு: மேற்படி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, அந்த பிரச்சினையை சற்றும் பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவர் ஹாயாக மக்காச்சோளம் சாப்பிட்டு கொண்டு இருந்தது பொதுமக்கள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தியது.