பிரபல கஞ்சா வியாபரிகளுக்கு குண்டாஸ்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
எத்தனை முறை வழக்கு போட்டாலும் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தடுப்புக்காவல் தொடர்பான ஆணையை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கிதா அவர்கள் பிறப்பித்துள்ளார்.
- சிவனம்மாள், 38, முத்தையா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெரு, உத்தமபாளையம் தாலுகா, தேனி மாவட்டம்
- ராஜேஷ், 26, பாஸ்கரன், மேலக்கால், வாடிப்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.
இந்த தகவலை மாவட்ட காவல் துறை வெளியிட்டிருக்கிறது.