இறந்த பின்னரும் அவதி! தூங்கி வழியும் அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல் கிளையாற்றில் செல்லும் தண்ணீரில் எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டது. உடலை புதைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்திலும் தண்ணீர் தேங்கி நின்றதால் கிராம மக்கள் அவதி.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே தனது மாமியார் வீடான காட்டுகொல்லை பகுதிக்கு குடிப்பெயர்ந்து அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி திடீரென்று உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
ஆகவே கிருஷ்ணமூர்த்தியின் உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு செல்லும்போது சாலை வசதி இல்லாததால், கிளை ஆற்றில் செல்லும் வெள்ளத்தில் இறங்கி இறந்தவரின் உடலை சுமந்து சென்றனர்.
மேலும் கிளையாற்றின் அருகில் இருந்த மயானத்தில் இறந்தவரின் உடலை புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் 5 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்ததால் இரவு நேரத்தில் தண்ணீரை அப்புறப்படுத்திய பின்னர் சடலத்தை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டது
கிராமத்திற்கு மயான வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் இதுபோன்ற அவல் நிலை ஏற்படுவதாகவும் அரசு உரிய மயான இடம் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.