புகார் மீது இரண்டே நாட்களில் தீர்வு காணவேண்டும்! புதிய எஸ்.பி.அதிரடி!

புகார் மீது இரண்டே நாட்களில் தீர்வு காணவேண்டும்! புதிய எஸ்.பி.அதிரடி!

 கு.அசோக்,

  இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த மனுவின் மீது இரண்டு நாட்களில் பதில் வர வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரம் தொறும் புதன்கிழமை பொதுமக்களின்  குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி, நேற்று பாரதி நகரில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  புதிய எஸ்.பி.விவேகானந்தா சுக்லா தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் கடன் பிரச்சனை, சீட்டு பணம் மோசடி, நிலப்பிரச்சனை, காணவில்லை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்களை நேரடியாக கலந்துரையாடி புகார் மனுக்களைப்பெற்றார்.

   அதனை பெற்றுக் கொண்டு கண்காணிப்பாளர் மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரண்டு நாட்களில் எனக்கு பதில் வர வேண்டுமென காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  இந்த கூட்டத்தில் மொத்தம் 20 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் இராணிப்பேட்டை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமால், அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் உட்பட பல்வேறு காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.