வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை! பத்து பாக்கெட்டுடன் பிடிபட்ட முதியவர்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த முதியவரிடம் போலீசார் விசாரணை.20 பாக்கெட் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, பேருந்து நிலையத்தில் கள்ளச்சாராய பாக்கெட் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனேஅங்கு சென்ற நகர போலீசார் விசாரணை செய்ததில், அங்கு சாராயம் விற்பனை செய்தவர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கலீல் (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் 20 கள்ளச்சாராயப் பாக்கெட்டுகள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அவர் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட மாதகடப்பா, தேவராஜபுரம் போன்ற மலைப்பகுதியில் காச்சப்படும் கள்ளச்சாராயத்தை பேருந்து மூலமாக வாணியம்பாடிக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இது தொடர்பாக அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மீண்டும் கள்ளச்சாராயம் வாணியம்பாடி பகுதியில் விற்பனை செய்து வந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.