ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதியதாக சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் சேர்ப்பு! தீவிர விசாரணை!

ம.பா.கெஜராஜ்,
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் கடந்த 5 ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணம் என்று முதற்கட்டமாக 11 பேர் போலிஸ் பிடியில் சிக்கிய நிலையில் அவர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பெண்தாதா உள்ளிட்ட மூவர் கைதானார்கள்.
இந்நிலையில் மேலும் மூன்று பேர் இந்த கொலை வழக்கில் சிக்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்கள் பெயர்கள் வெளியாகியிருக்கின்றன.
சீனிவாசன், கார்த்திக், கிறிஸ்டோபர் என்கிற ஆகிய மேற்படி 3 பேரை புனித தோமையார் மலை ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.