வெள்ளை பன்றி வளர்க்கும் சகோதரர்கள்! சுகாதார சீர்கேட்டில் சிக்கும் மக்கள்!

வெள்ளை பன்றி வளர்க்கும் சகோதரர்கள்! சுகாதார சீர்கேட்டில் சிக்கும் மக்கள்!

ஜி.கே.சேகரன்,

ஜோலார்பேட்டை அருகே ஐந்து ஆண்டுகளாக வெள்ளை பன்றி வளர்த்து வருவதால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு சொல்லியிருக்கிறார்கள்.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அண்னான்டப்பட்டி, அண்ணா வட்டம் பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெள்ளை பன்றிகளை வளர்த்து வருகிறார்கள்.

  அதே பகுதியை சகோதரர்கள் மகாராஜா, ராஜ்குமார்ளாகியோர் தான் இந்த வெள்ளைப் பன்றிகளை வளர்த்து வருவதாகவும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, தோல் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டுஉறுப்பினர், கிராம சபாகூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர் என சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அந்த கோரிக்கை மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

  இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறுகின்றனர்.