பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வேலூரில் போராட்டம்!

ஜி.கே.சேகரன்,
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து, படுகாயம் அடைந்ததை போன்று வேடமணிந்து திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்பாட்டம்.
வேலூர்மாவட்டம், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது அதில் பாலஸ்தீன நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்து குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் எனபார்க்காமல் இஸ்ரேல் நாடு தாக்குதலை நடத்தி மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசி மக்களை கொன்று குவித்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
குறிப்பாக பெண்கள் குழந்தைகள் என அனைவரும் இந்த குண்டு வீச்சில் பலியாகி வருகின்றனர் இந்த பயங்கரவாத செயலில் ஈடுபடும் இஸ்ரேல் நாட்டினை கண்டித்து சிறுவர்கள் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டதை போல் வேடமணிந்து கண்டன ஆர்பாட்டத்தை நடத்தினார்கள் இதில் இஸ்ரேலை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள் இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.