குளத்து மண்ணை அனுமதியின்றி அள்ளிச்செல்வதா? பொதுமக்கள் போராட்டம்!

கு.அசோக்,
குளங்கள் புனரமைப்பதற்காக தூர்வாரும் பொழுது வரக்கூடிய மணல்களை ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் எவ்வித அனுமதியும் இன்றி பல்வேறு பணிகளுக்கு டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதை பொதுமக்கள் கண்டித்துள்ளனர். கூடவே டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒழுகூர் ஊராட்சி பகுதியில் குளங்கள் தூர்வாரப்பட்டு புளரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குளங்கள் தூர்வாரப்படும் பொழுது குளங்களில் இருந்து எடுக்கப்படும் மண் குளங்களின் கறைகளை பலப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒழுகூர் ஊராட்சி பகுதியில் குளங்கள் தூர்வாரப்படும் பொழுது எடுக்கப்படுகின்ற மண் எவ்வித அனுமதி மற்றும் ஒப்பந்தங்கள் இன்றி விதி மீறல் செய்யப்பட்டு மண் பல்வேறு பணிகளுக்காக டிராக்டர்களின் மூலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ஒழுகூர் ஊராட்சியை சேர்ந்த ஒழுகூர் காலனி குடியிருப்பு பகுதி மக்கள் குளங்கள் தூர் வாரும் பகுதியில் இருந்து விதிமுறைகளுக்கு முரணாக மணல்களை வேறு பணிகளுக்கு ஏற்றி செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் மண் ஏற்றி செல்ல இருந்த வாகன ஒட்டுநர்களிடம் யார் உங்களுக்கு அனுமதி வழங்கியது என கேட்டதற்கு, ஊராட்சி மன்ற நிர்வாகத்தினரின் அனுமதியோடு எடுத்து செல்லப்படுவதாகவும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பது போன்ற பல்வேறு பொது பணிகளுக்கு பயன்படுத்த கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குளங்கள் தூர்வாரும் பகுதிகளிலிருந்து டிராக்டர் மூலம் எவ்வித அனுமதியும் இன்றி மண் வேறு இடங்களில் நடைபெறும் பணிகளின் தேவைகளுக்காக கொண்டு செல்லப்படுவதை கண்டித்து கிராம மக்கள் டிராக்டர்களை சிறைப்பிடித்து ஒழுகூர் காலனி குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சனை சம்பந்தமாக சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் பி,டி,ஓ விடம் கேட்டதற்கு ஒழுகூர் ஊராட்சி பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குளங்கள் தூர்வாரும் பொழுது எடுக்கப்படுகின்ற மண் குளங்களின் கரைகளை பளப்படுத்த மட்டும் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தற்போது பொதுமக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டின் அடிப்படையில் குளங்கள் தூர்வாரப்படும் பொழுது எடுக்கப்படுகின்ற மண்ணை வேறு பணிகள் காரணம் காட்டி எடுத்து செல்லப்படுவது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்