திருவள்ளுவர் சிலை - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்தார்!

திருவள்ளுவர் சிலை - டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்தார்!

பா.சுரேஷ்

அச்சிறுபாக்கம் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை - வேந்தர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்தார்.

  எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, தெய்வ புலவர் திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் எம். பி.திறந்து வைத்துடன், திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள், திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார்.

   உலக முழுவதும் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் சார்பில் உலக பொது மறையாம் திருக்குறளை வழங்கிய தெய்வ புலவர் திருவள்ளுவரின் திருவுருவ சிலையை நிறுவி வருகிறது. இது வரையிலும் 155 சிலைகளை அச்சங்கம் அமைத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பாபுராயன் பேட்டை வேந்தர் நகரில் இயங்கி வரும் எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவரின்  156 வது சிலை நிறுவப்பட்டுள்ளது, அதன் திறப்பு மற்றும் செ. நல்லசாமி எழுதிய திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா இன்று கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் முனைவர் சு. பொன்னுசாமி, தமிழப் பேராய தலைவர் முனைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் எஸ்ஆர்எம் வளாக அலுவலர் அருணாச்சலம் நன்றி கூறினார்.