ஓடுதளம் சரியாக அமைத்தவுடன் விமான சேவை துவங்கும்! வேலூரில் மத்திய அமைச்சர் பேட்டி!

ஜி.கே.சேகரன்,
அப்துல்லாபுரம் விமான நிலையம் விரைவில் சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கபடும் - சுங்கசாவடிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளவைகள் நவீன முறையில் சுங்கம் வசூலிக்கும் முறை செயல்படுத்தபடவுள்ளது - மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர்,வி.கே சிங் பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் பாரதியஜனதா கட்சியின் சார்பில் சிந்தனையாளர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்க கருத்தரங்கம் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே சிங் தலைமையில் நடைபெற்றது. பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்டத் தலைவர் மனோகரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஜெகன், பாபு உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில் பா.ஜ.க. அரசு 9 ஆண்டுகளில் அதிக அளவில் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு விரைவாக வளர்ந்து கொண்டே வருகிறது என கூறினார்.
மேலும் வேலூர் விமான நிலையம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த வி.கே.சிங் வேலூருக்கு பல நாடுகளிலிருந்து வரும் வரையில் விமானங்கள் இயக்க விரும்புகிறோம், ஆனால் ஓடுதளம் சரியாக அமைக்க முடியவில்லை இதனால் தனியார் விமான நிறுவனங்களும் இங்கு விமான சேவையை வழங்குவதில் சிரமம் உள்ளதால்,விமான சேவையை துவங்க முடியவில்லை.
ஆனால் பல மருத்துவமனைகளும் உள்ளது, விரைவில் இங்கு விமான நிலைய பணிகள் முடிந்த விமான சேவை துவங்கபடும்.
விரைவில் சுங்கசாவடியில் நவீனமயமாக்கபடும் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் செயற்கை கோள் உதவியுடன் வாகனங்களை படம் எடுத்து சுங்கசாவடியை கடக்கும் முறையும் செயல்படுத்தபடவுள்ளது.
மேலும் எத்தனை கிலோமீட்டர் மக்கள் செல்கின்றனர் என்பதை பொறுத்தும் சுங்கம் வசூலிக்கும் திட்டமும் செயல்படுத்தபடவுள்ளது.
சுங்கசாவடிகளை நாங்கள் ஏலம் விட்டு விட்டோம், அதனை இங்குள்ளவர்கள் நடத்துகிறார்கள் எவைகள் காலவதியானது என்பதை கண்டறிவதும் சிரமமாக உள்ளது எதாவது சுங்கசாவடி புகார்கள் என்றாலும் தெரிவிக்கலாம் என கூறினார்.