செந்தில் பாலாஜிக்கு நாளை இதய ஆபரேஷன்! அதிகார பூர்வ அறிவிப்பு! நடிக்கிறார் என்று சொல்லும் வி.பி. துரைசாமி! 

செந்தில் பாலாஜிக்கு நாளை இதய ஆபரேஷன்! அதிகார பூர்வ அறிவிப்பு! நடிக்கிறார் என்று சொல்லும் வி.பி. துரைசாமி! 

 ம.பா.கெஜராஜ்,

 சட்ட விரோத பண பறிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து கழத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்தார் என்ற வழக்கின் அடிப்படையில் அமக்காத்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 இதையடுத்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அதை நாடகம் என்று பலரும் விமர்சித்துள்ளார்கள்.

 இந்நிலையில் மாநில பா.ஜ.க. துணை செயலாளர் வி.பி. துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 அப்போது அவர் தெரிவிக்கையில், திரை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்போது இல்லை. அவர் இருந்திருந்தால் அற்புதமான கதாநாயகன் கிடைத்து விட்டாரே என செந்தில் பாலாஜியை வைத்து நெஞ்சுவலி என்ற படத்தை எடுத்திருப்பார், நெஞ்சுவலி வந்த யாராவது, எனக்கு நெஞ்சுவலிக்கிறது என சத்தமாக கத்துவார்களா? விசாரணையிலிருந்து தப்பிக்கவே செந்தில் பாலாஜி இப்படி நடிக்கிறார் என்று வி.பி.துரைசாமி சொன்னார்.

 நாளை ஆபரேஷன்,

 இந்நிலையில் நாளை அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

   சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏற்கனவே செந்தில் பாலாஜியின் இதயத்தில் ஏற்பட்ட அடைப்புக்கான பிளட் தின்னர் ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டதால், உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை.

   மீறியும் செய்தால் இதயத்தில் ரத்தக்கசிவு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் 5 நாட்கள் செந்தில் பாலாஜி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

   நேற்றிரவு செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கான தகுதியை பெற்றுவிட்டதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆகவே நாளை அதிகாலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் சொன்னார்.