வட சென்னை சினிமா பாணி:- ரவுடி ஆபத்துசகாயத்தை போட்டுதள்ளிய 14 வயது சிறுவன்!

வட சென்னை சினிமா பாணி:- ரவுடி ஆபத்துசகாயத்தை போட்டுதள்ளிய 14 வயது சிறுவன்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 பெரிய ரவுடியாக திரிந்து கொண்டிருந்தவனை வட சென்னை சினிமா பாணியில் 14 வயது சிறுவன் குத்தி சாய்த்துள்ளான்.

 இது பற்றின விவரம் வருமாறு,

கன்னியாகுமரி மாவட்டம் குமரிமுனை பகுதியில் உள்ள ரட்சகர் தெருவைச் சேர்ந்தவர் சகாயம் (எ) ஆபத்து சகாயம்,  மீனவரான இவன் மீது பல வழக்குகள் பல காவல் நிலையங்களில் இருக்கின்றன.

 சரக்கு போட்டுவிட்டு அப்பாவிகளிடம் ரவுடியிஸம் செய்வது அவனது வாடிக்கை.

 அப்படியிருக்க சில தினங்களுக்கு முன்பு இரவு கடற்கரை அருகே சகாயம் உட்கார்ந்திருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற 14 வயது சிறுவனை தகாத வார்த்தையில் திட்டியுள்ளான் சகாயம். அப்போது சகாயத்தை பார்த்து அந்த சிறுவன் முறைத்துள்ளான். ஆத்திரம் அடைந்த சகாயம், அந்த சிறுவனை பிடித்து மது பாட்டிலால் தாக்கியிருக்கிறான்.பயந்து போன அந்த சிறுவன், அவனிடம் இருந்து தப்பித்து ஓடி வந்துள்ளார். பின்னர் அடுத்த நாள், தனது நண்பர்களிடம் நடந்த விஷயத்தை அழுது கொண்டே சொன்னானம்

 இதனால் கோபப்பட்ட அவர்கள் சகாயத்தை தீர்த்துக்கட்ட முடிவு எடுத்தனர். அதன்படி, நேற்று முன்தின இரவு கடற்கரை அருகே சிறுவனும், அவனது நண்பர்களும் கையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தனர். அப்போது தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளான் சகாயம். பின்னர் அவனது நண்பர்கள் அங்கிருந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, மது போதையில் அங்கிருந்து புறப்பட்ட சகாயத்தை சிறுவர்கள் வழிமறித்து அடிக்க பாய்ந்தனர்.

 சுதாரித்துக் கொண்ட சகாயம், அவர்களை சரமாரியாக அடித்துள்ளான். அப்போது சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அவனை திருப்பி தாக்கினர். சிறுவர்களின் திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத சகாயம் நிலைக்குலைந்துள்ளான். அப்போது, சகாயத்திடம் அடி வாங்கிய சிறுவன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சகாயத்தின் மார்பில் சரமரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். குத்து வாங்கிய சகாயம் ஸ்பாட் அவுட் ஆகிவிட்டான்.

  இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்திய போது, அங்கு கிடந்த கத்தியை எடுத்துள்ளனர். பின்னர் அதில் பதிந்திருந்த கைரேகையை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த சிறுவனை போலீஸார் கைது செய்தனர். இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த மற்ற 2 சிறுவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

  வட சென்னை பாணியில் நடந்த கொலையால் பொது மக்கள் மட்டுமின்றி காவல் துறையினரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.