தொழுகையின் போது பூட்ஸ் கால்களால் உதைக்கப்பட்ட இஸ்லாமியர்கள்! பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லையே? அமைச்சர் துரைமுருகன் வேதனை!

கு.அசோக்,
தொழுகையின் போதே இஸ்லாமியர்கள் பூட்ஸ் கால்கலால் உதைத்து தாக்கப்பட்டனர். இதற்கு பிரதமர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை - திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற கூடியதா நிறைவேற்ற முடியாததா என்பதை பாஜக எங்கள் செயல்பாட்டில் பார்க்க வேண்டும் வேலூரில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், வேலூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் தேசிய செயலாளர்ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் பாஷித் தலைமையில் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி அனீப்,காங்கிரஸ் மாவட்டத்தலைவர் டீக்காராமன், மற்றும் திரளான இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு நோன்பு கஞ்சி மற்றும் உணவு உண்டு நோன்பினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மத்திய பாஜக ஆட்சியில், தொழுகையின் போதே இஸ்லாமியர்கள் பூட்ஸ் கால்கலால் உதைத்து தாக்கபடுகின்றனர். இதற்கு பிரதமர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை இதற்கெல்லாம் பாடம் புகட்ட விடியல் ஏற்படும் என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோட்டை மைதானத்தில் 2ஆம் தேதி (செவ்வாய் அன்று) தமிழக முதல்வர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசுவுள்ளார். அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள் தான் வெற்றிபெறுவோம் என கூறுகிறா£.
சுயேட்சை வேட்பாளர் கூட சொல்கிறார் நான் தான் வெற்றி பெறுவேன் என்று. அது அந்தந்த கட்சிக்கு இருக்கும் உரிமை. ஒவ்வொரு கட்சிக்கும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்ல உரிமை உண்டு. எந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள்.
பாஜக திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் என சொல்கிறார்களே என்ற கேள்விக்கு நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளா நிறைவேற்ற முடியாத வாக்குறுதியா என்பதை எங்களின் செயல்பாட்டில் தான் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.