மனதார உதவி செய்த அமைச்சர் ஆர்.காந்தி!

கு.அசோக்,
மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக கூலி தொழிலாளியின் வீடு முற்றிலுமாக விடிந்து சேதம் அடைந்ததை பார்வையிட்டு பண உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி உதவி செய்தார் கைத்தறித்துறை அமைச்சர் ஆ£.காந்தி.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது
இந்த நிலையில் தாழ்வான பகுதியில் வசிப்போர் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்போரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைத்து பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பரிசோதனை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஜெயராம் பேட்டை பகுதியில் வசிக்கும் மலர் சின்னபையன் தம்பதியர்களின் வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. தகவல் அறிந்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான போர்வை தலையணை பாய் அரிசி வேட்டி சேலை உள்ளிட்ட பண உதவி வழங்கிதோடு இடிந்து வீட்டை கட்டுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஆற்காடு, கலவை, வாலாஜாப்பேட்டை ஆகிய தாலுகாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் மனோன்மணி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல.ஈஸ்வரப்பன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.